Published : 22 Sep 2019 09:54 AM
Last Updated : 22 Sep 2019 09:54 AM

நன்றி வேண்டாம்!

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி நடிப்பில் ‘நாடோடிகள் 2’ திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. முதல் பாகத்தில் நடித்த சசிகுமார், பரணி, நமோ நாராயணன் ஆகியோர் தவிர, 2-ம் பாகத்தில் பலரும் புதியவர்கள். இப்படத்தில் ‘செங்கொடி’ என்ற கதாபாத்திரத்தில் அஞ்சலி நடிக்கிறார். அவர் கூறும்போது, ‘‘2-ம் பாகங்கள் உருவாக்கும்போது முதல் பாகத்தின்பெயரை சிதைக்காமல் களம்அமைக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் பெயர்வாங்கிக் கொடுத்த படம் ‘நாடோடிகள்’. அந்த நற்பெயரை 2-ம் பாக திரைக்கதை நிச்சயம் காப்பாற்றும். நடப்பு விஷயங்களை சமூக அக்கறையோடு பிரதிபலிக்கும் படம். இதில் எனக்கு சண்டைக் காட்சிகள் எல்லாம் உண்டு. சமுத்திரகனி என் குடும்ப நபர்களில் ஒருவர். பல நேரங்
களில் எனக்கு பெரிய ஆறுதலாக இருந்தவர். அதனால், இப்பட வாய்ப்புக்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x