Published : 12 Sep 2019 10:35 AM
Last Updated : 12 Sep 2019 10:35 AM
'தர்பார்' படம் நன்றாக வந்திருப்பதாக சென்னை திரும்பிய ரஜினி தெரிவித்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.
தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நெருங்கியுள்ளது படக்குழு. 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட அன்றே வெளியிடப்பட்டது. நேற்று (செப். 12) 'தர்பார்' படத்தின் புதிய போஸ்டரை இணையத்தில் வெளியிட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், மும்பை படப்பிடிப்பிலிருந்து நேற்று (செப்.12) சென்னை திரும்பினார் ரஜினி. அப்போது செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். ஆனால் 'தர்பார்' படத்தின் கேள்விகளுக்கு மட்டும் "படம் நன்றாக வந்துள்ளது. பொங்கலுக்கு வெளியாகும்" என்று கூறிவிட்டுச் சென்றார் ரஜினி.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. 'தர்பார்' படத்துக்குப் பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT