Published : 26 Aug 2017 08:00 PM
Last Updated : 26 Aug 2017 08:00 PM
அடுத்த ஆண்டு கண்டிப்பாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குவேன் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
சந்தானம் நடித்து வரும் 'மன்னவன் வந்தாண்டி' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். அப்படத்தை முடித்துவிட்டு, சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில், பலரும் "நீங்கள் எங்களோடு கலந்துரையாட வேண்டும்" என்று கேட்டனர். அதனைத் தொடர்ந்து செல்வராகவன், ட்விட்டர் பக்கத்தில் தன்னை பின் தொடர்பவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அவருடைய பதில்களின் தொகுப்பு:
* தன்னுடைய இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம், மிகவும் சிறப்பான படமாக இருக்கும்.
* கண்டிப்பாக அடுத்த ஆண்டு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளேன்.
* 'புதுப்பேட்டை 2', 'ஆயிரத்தில் ஒருவன் 2' ஆகிய படங்கள் கண்டிப்பாக நடைபெறும். நீங்கள் நினைப்பதை விட விரைவில்...
* 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் ஒரு செல்வராகவன் படமாக இருக்கும்.
* நேர்மறையான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறேனோ, அப்படித்தான் எதிர்மறையான விமர்சனங்களையும் எதிர்கொள்கிறேன்.
* கண்டிப்பாக கொக்கி குமார் விரைவில் இருக்கும்.
* தமிழ் திரையுலகில் தனக்குப் பிடித்தமான நடிகர் கமல் சார்
* சந்தானம் மிகவும் நேர்மையான, உண்மையாக நடிகர்
* எனக்கென தனி பாணி இல்லை. எனக்கு பிடிக்கும் வகையில் வரவுள்ள படங்களில் கமர்ஷியல் அம்சங்கள் இருக்கும்
இவ்வாறு செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT