Last Updated : 01 Aug, 2017 08:32 PM

 

Published : 01 Aug 2017 08:32 PM
Last Updated : 01 Aug 2017 08:32 PM

அறம் செய்து பழகு படத்தைத்தொடர்ந்து நவம்பரில் அடுத்த படம் வெளியீடு: சுசீந்திரன் தகவல்

'அறம் செய்து பழகு' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படம் நவம்பரில் வெளியாகும் என்று சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி உள்ளிட்ட பலர் நடிக்க சுசீந்திரன் இயக்கிவரும் படம் 'அறம் செய்து பழகு'. இப்படத்தின் இறுதக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பரில் வெளியிடலாம் என்று படக்குழு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் 'அறம் செய்து பழகு' படத்தை இயக்கியது போக, கிடைக்கும் நேரத்தில் புதிய முகங்களை வைத்து புதிய படமொன்றையும் இயக்கியுள்ளார் சுசீந்திரன். இதற்கு 'இளமை ஊஞ்சலாடுகிறது' என்று தலைப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இச்செய்தி குறித்து இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

'அறம் செய்து பழகு' திரைப்படத்தை அடுத்து நான் இயக்கும் திரைப்படத்தில் 'ஆதலால் காதல் செய்வீர்' போல், முழுவதும் புதுமுக நடிகர்களே நடித்து உள்ளனர். கல்லூரி மாணவர்களை சுற்றி நடக்கும் கதை இது. இத்திரைப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. நவம்பரில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

ஒரு பெண்ணின் பெயரை இப்படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளோம். இம்மாத இறுதியில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

இவ்வாறு சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x