Published : 15 Aug 2017 04:52 PM
Last Updated : 15 Aug 2017 04:52 PM
ரஜினி ரசிகர்களுக்கான கொண்டாட்டமாக 'காலா' திரைப்படம் இருக்கும் என தனுஷ் தெரிவித்துள்ளார்.
'வேலையில்லா பட்டதாரி 2' வெளியீட்டை முன்வைத்து, சமூகவலைதளத்தில் வீடியோ வடிவில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு தனுஷ் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் 'காலா' படம் குறித்து எழுப்பிய கேள்விக்கு தனுஷ் கூறியதாவது:
'காலா' படம் பிரமாதமாக வந்துள்ளது. இதுவரை 60% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அப்படம் கண்டிப்பாக ரஜினி ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும்
இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் 'வேலையில்லா பட்டதாரி 3' படம் குறித்து, "கண்டிப்பாக நடைபெறும். ஆனால் உடனடியாக தொடங்கப்படாது. அனைத்துமே திட்டமிட்டபடி நடந்தால், 2018-ம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2019-ல் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகியுள்ள ’வேலையில்லா பட்டதாரி 2’ படத்துக்கு விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு இல்லாவிட்டாலும், வசூல் ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT