Published : 08 Sep 2016 06:22 PM
Last Updated : 08 Sep 2016 06:22 PM
பாலா இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகனாக யுவனும், நாயகியாக பிரகதியும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
'தாரை தப்பட்டை' படத்தைத் தொடர்ந்து தனது படத்தில் கவனம் செலுத்தி வந்தார் இயக்குநர் பாலா. வேல.ராமமூர்த்தி எழுதிய புத்தக்கத்திலிருந்து சிறுபகுதியை எடுத்து திரைக்கதையை அமைத்து படமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா உள்ளிட்டவர்களைக் கொண்டு இப்படம் தொடங்கவிருப்பதாக பாலா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அப்படத்துக்கு முன்பாக முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டார் பாலா.
இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது. இறுதியில் படத்தின் நாயகனாக 'சாட்டை' படத்தில் நடித்த யுவன் நடிக்க உள்ளார். நாயகியாக பிரகதி குருபிரசாத் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் பிரகதி. அவரை 'பரதேசி' படத்தின் மூலமாக பாடகராகவும் அறிமுகப்படுத்திய பாலா, தற்போது நாயகியாகவும் அறிமுகப்படுத்துகிறார். இதர நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT