Published : 03 Jun 2017 03:44 PM
Last Updated : 03 Jun 2017 03:44 PM
சீனுராமசாமி இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார்.
'கூடல்நகர்', 'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'இடம் பொருள் ஏவல்', 'தர்மதுரை' ஆகிய படங்களை இயக்கியவர் சீனுராமசாமி. இதில் 'இடம் பொருள் ஏவல்' படம் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.
கிராமத்துக் கதைக் களத்தில் கதைமாந்தர்களின் குணாதிசயங்களை யதார்த்தமாக காட்சிப்படுத்துவதில் கவனம் செலுத்துபவர் சீனுராமசாமி. இதனாலேயே மக்கள் இயக்குநர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
'தர்மதுரை' படத்துக்குப் பிறகு 'மாமனிதன்' என்ற திரைப்படத்தை சீனுராமசாமி தொடங்கினார். அதில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவித்தார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இதற்கிடையில் சசிகுமாரை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் சீனுராமசாமி. இப்படத்தில் சசிகுமார் விவசாயியாக நடிக்கிறார். தற்போதைய சூழலில் ஒரு விவசாயி எதிர்கொள்ளும் பிரச்சினைகளே படத்தின் கதைக்களம்.
படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. நடிகர்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT