Published : 09 Sep 2016 06:40 PM
Last Updated : 09 Sep 2016 06:40 PM
பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பைரவா' படத்தைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படம் குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. முக்கியமான சண்டைக் காட்சி மற்றும் சில காட்சிகளை படமாக்கி விட்டு சென்னை திரும்ப இருக்கிறது படக்குழு. அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று பாடலை படமாக்க இருக்கிறார்கள். ஒட்டு மொத்த படப்பிடிப்பு முடிந்து, பொங்கல் 2017க்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை விஜயா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது.
'பைரவா' படத்தைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை அட்லீ இயக்க பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறார்கள்.
இப்பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 'தெறி 2' வாக இன்றி மற்றொரு கதையைத் தான் அட்லீ இயக்குவார் என்றும் தெரிவித்தார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT