Published : 22 May 2017 04:07 PM
Last Updated : 22 May 2017 04:07 PM
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'வேலைக்காரன்' திரைப்படத்தின் மலேசிய படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியுள்ளது படக்குழு.
'ரெமோ' படத்தைத் தொடர்ந்து 24 ஏ.எம். நிறுவனம் தயாரித்து வரும் 'வேலைக்காரன்' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். மோகன் ராஜா இயக்கி வருகிறார்.
சிவகார்த்திகேயனோடு நயன்தாரா, பஹத் பாசில், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகிணி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
2016-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிந்து, மலேசியாவில் தொடங்கப்பட்டது.
சுமார் 23 நாட்கள் நடைபெற்று வந்த மலேசிய படப்பிடிப்பு முடிவு பெற்று, சென்னை திரும்பியுள்ளது படக்குழு. விரைவில் சென்னையில் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
இறுதிகட்டப் பணிகள் முடிந்து, இப்படம் செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.
'வேலைக்காரன்' படத்தை முடித்துவிட்டு, பொன்ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தையும் 24 ஏ.எம் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT