Published : 13 Sep 2018 08:53 AM
Last Updated : 13 Sep 2018 08:53 AM
தாய்மொழியில் கையெழுத்திடுவோம் என்ற உறுதிமொழியை முன்வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார் நடிகர் ஆரி.
தனது திரைத்துறை அலுவலகம் சார்ந்த கையெழுத்து அனைத்தையும் தாய்மொழியான தமிழில் மாற்றிவிட்டதாகவும் இந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘‘தமிழ் வாழ வேண்டும் என்று எண்ணும் சில ஆர்வலர்களின் கையெழுத்தில்கூட தமிழ் இருப்பதில்லை. உலகுக்கே தாய்மொழி நம் தமிழ் மொழி. இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது. இதற்கு காரணம் நமது ஆங்கிலக் கல்வி மோகம். இந்த உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் தாய்போல எப்போதும் உடன் வருவது நம் தாய்மொழியே. தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல. அது நம் அடையாளம். எனவே, தாய்மொழியில் கையெழுத்திடுவோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT