Published : 13 Sep 2018 08:48 AM
Last Updated : 13 Sep 2018 08:48 AM

முருகதாஸை பாராட்டிய வரலட்சுமி

விஜய் நடிப்பில் வெளிவர உள்ள ‘சர்கார்’  திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, உடனடியாக டப்பிங் வேலைகளைத் தொடங்கியுள்ளது படக்குழு. இதில் வரலட்சுமி சரத்குமார் தற்போது டப்பிங் பேசியிருக்கிறார். அத்துடன் பட அனுபவம் குறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

‘சர்கார்’ படத்தில் என் பகுதிக்கான டப்பிங் முடிந்துவிட்டது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி. நான் இதுவரை பணியாற்றியதில் மிகவும் அழகான, இனிமையான இயக்குநர். எப்போதும் அமைதியாக இருக்கும் குணம் கொண்டவர். இந்த பயணத்தில் நானும் ஒரு பங்காக இருந்ததில் மகிழ்ச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x