Published : 20 Sep 2018 02:52 PM
Last Updated : 20 Sep 2018 02:52 PM

‘பிக் பாஸ் 2’ ஒளிபரப்பு நேரம் மாற்றம்

‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியின் நேரம் மாற்றியமைக்கப்பட இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ் 2’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் இந்த நிகழ்ச்சி, கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி தொடங்கியது. பொதுவாக, 100 நாட்கள்தான் ‘பிக் பாஸ்’ ஒளிபரப்பாகும். ஆனால், இந்த சீஸனில் 100-வது நாள் திங்கட்கிழமை வருவதால், 6 நாட்களை அதிகப்படுத்தி, வருகிற 30-ம் தேதி இறுதிப்போட்டி ஒளிபரப்பாக இருக்கிறது.

கடந்த வாரம் மும்தாஜ் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது ஜனனி, ரித்விகா, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, பாலாஜி, விஜயலட்சுமி ஆகிய பேரும் போட்டியாளர்களாக வீட்டுக்குள் இருக்கின்றனர். இவர்களில் 4 பேர் இறுதிப்போட்டியில் பங்கு பெறுவார்கள்.

இதுவரை, ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி முதல் 10.30 வரை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. அதனால் தான், எப்போதும் மாலை தொடங்கி இரவு 12 மணி வரை லைவ்வாக ஒளிபரப்பாகக் கூடிய ‘சூப்பர் சிங்கர்’ இறுதிப்போட்டியைக் கூட, கடந்த முறை மதியம் ஆரம்பித்து இரவு 9 மணிக்குள் முடித்துவிட்டனர். அந்தளவுக்கு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்காக நேரம் தொடர்பான விதியைத் தளர்த்திக் கொண்டது விஜய் டிவி.

ஆனால், அதிலும் ஒரு மாற்றம் வரப் போகிறது. வருகிற 24-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் இரவு 9 மணிக்கு ‘அரண்மனை கிளி’ என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. எனவே, 24-ம் தேதியில் இருந்து இரவு 9.30 மணி முதல் 11 மணி என ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியின் நேரம் மாற்றியமைக்கப்பட இருக்கிறது.

சீரியல் நாயகியான ஜானு, ரொம்பவே வெகுளிப் பெண். பணக்கார வீட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அர்ஜுன். ஜானு - அர்ஜுன் இருவரின் முதல் சந்திப்பே கசப்பாக அமைந்ததால், ஜானுவை அர்ஜுனுக்கு அறவே பிடிக்காது. ஆனால், சூழ்நிலை காரணமாக அர்ஜுன் - ஜானுவுக்குத் திருமணம் நடந்து விடுகிறது.

அர்ஜுனின் அம்மா மீனாட்சி, மிகப்பெரிய தொழிலதிபர். தன் மகனுக்குப் பிடித்த பெண்ணைத்தான் அவனுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பது அவருடைய கனவு. ஆனால், சூழ்நிலை ஜானுவைத் திருமணம் செய்துவைக்குமாறு ஆக்கிவிடுகிறது.

அர்ஜுன், அவன் தாய் மீனாட்சி இருவருக்குமே ஜானுவை சுத்தமாகப் பிடிக்காத நிலையில், அந்த வீட்டுக்கு வாழ வருகிறாள் ஜானு. எல்லோருடைய வெறுப்புகளையும் மீறி, அந்த வீட்டிலுள்ளவர்களில் மனதில் ஜானு இடம்பிடிப்பாளா? என்பதுதான் ‘அரண்மனை கிளி’ சீரியலின் கதை.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

‘பிக் பாஸ்’: 4 போட்டியாளர்கள்... 4 மணி நேரம் ஒளிபரப்பு

விஜய் டிவியின் புதிய சீரியல் ‘அரண்மனை கிளி’: ‘பிக் பாஸ் 2’ நேரத்தில் ஒளிபரப்பாகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x