Published : 12 Jun 2019 08:37 AM
Last Updated : 12 Jun 2019 08:37 AM

வசனகர்த்தா கிரேஸி மோகன் உடல் தகனம்: கமல்ஹாசன் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி

நாடக ஆசிரியரும், வசனகர்த்தாவு மான கிரேஸி மோகனின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.

நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என பன்முகத் திறன் கொண்டவர் கிரேஸி மோகன். இவர், ‘மாது மிரண்டால்’, ‘சாட்டிலைட் சாமியார்’, ‘சாக்லேட் கிருஷ்ணா’ உள்ளிட்ட ஏராளமான நகைச்சுவை நாடகங்களை உலகம் முழுவதும் நடத்தி முத்திரை பதித் தவர். ‘பொய்க்கால் குதிரை’ படத் தில் வசனம் எழுதத் தொடங்கி யவர், ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘சதிலீலாவதி’, ‘அவ்வை சண்முகி’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘அருணாச் சலம்’, ‘தெனாலி’, ‘பஞ்ச தந்திரம்’, ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ என ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

50-க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்துள்ளார். ‘கல்யா ணத்துக்கு கல்யாணம்’, ‘விடாது சிரிப்பு’ உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்த கிரேஸி மோகன் 100 சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

இந்நிலையில், கிரேஸி மோகனுக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, மந்தைவெளியில் உள்ள இல்லத்தில் திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிவகுமார், காத்தாடி ராமமூர்த்தி, கவுண்டமணி, விவேக், வையாபுரி, மனோபாலா, தாமு, கவுதமி உட் பட நாடக, திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இயக்குநர்கள் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், நடிகர்கள் ஜெயராம், சூர்யா ஆகியோர் நேற்று காலை அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், மந்தைவெளி வீட்டில் இருந்து கிரேஸி மோகனின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத் துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல் லப்பட்டது. கிரேஸி மோகனின் தம்பி மாது பாலாஜி, மகன்கள் உள்ளிட்டோர் இறுதிச் சடங்குகளை செய்தனர்.

இதில் கமல்ஹாசன், பூஜா குமார், மதன்பாப், மாஸ்டர் கணேஷ் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். நண்பகல் 11.45 மணி அளவில் கிரேஸி மோகன் உடல் தகனம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x