Last Updated : 10 Mar, 2018 11:38 AM

 

Published : 10 Mar 2018 11:38 AM
Last Updated : 10 Mar 2018 11:38 AM

இமயமலை புறப்பட்டார் ரஜினிகாந்த் : 15 நாட்கள் தங்குவதாக பேட்டி

இன்று காலை இமயமலை புறப்பட்ட ரஜினிகாந்த், அங்கு 15 நாட்கள் தங்கியிருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிப்பில் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ‘காலா’ படம் ரிலீஸாக இருக்கிறது. தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘2.0’ படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ரஜினி, அரசியலிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார் ரஜினி. சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், இமயமலையில் 15 நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாகவும், அங்கு சென்ற பிறகுதான் எத்தனை நாட்கள் என்பது குறித்து உறுதியான முடிவு எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவுக்குச் சென்று, அங்கிருந்து தர்மசாலா, உத்தராகண்ட்டில் உள்ள ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்கிறார். இந்தப் பயணத்தில் தனது முக்கிய ஆன்மிக வழிகாட்டிகளை சந்தித்து ஆசி பெறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x