Published : 14 May 2019 01:10 PM
Last Updated : 14 May 2019 01:10 PM
மோகன் ராஜா இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘தனி ஒருவன்’. ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடித்த இந்தப் படம், சூப்பர் டூப்பர் ஹிட்டானது. குறிப்பாக, வில்லனாக நடித்த அரவிந்த் சாமியின் கதாபாத்திரமான சித்தார்த் அபிமன்யுவை ரசிகர்கள் கொண்டாடினர்.
ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால், ‘தனி ஒருவன் 2’ எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ஜெயம் ரவியின் 25-வது படமாக இது இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், ‘தனி ஒருவன் 2’ படத்துக்கான முதற்கட்டப் பணிகள் இன்னும் முடியவில்லை.
எனவே, ஜெயம் ரவியின் 25-வது படத்தை லட்சுமணனும், 26-வது படத்தை அஹமதுவும் இயக்குகின்றனர்.
இந்நிலையில், ‘தனி ஒருவன் 2’ குறித்து ட்வீட் செய்துள்ளார் மோகன் ராஜா. உரையாடல் போல இந்த ட்வீட் அமைந்துள்ளது.
“ ‘தனி ஒருவன்’ அடுத்த பாகத்துக்கான கதை உருவாக்கத்தின் மிகச்சிறந்த தருணம்.
நான், என்னுடைய உதவியாளர்களிடம்: எதிர்பார்ப்புகளை அடைந்துவிடலாமா?
உதவியாளர்கள்: 200% சார்
போன் அடிக்கிறது.
இயக்குநர் ராம்: ராஜா, மறுபடி ‘தனி ஒருவன்’ பார்த்துக்கிட்டு இருக்கேன். மிகப்பெரிய உழைப்பு. எப்படி இப்படி? அடுத்த பாகத்தை ஜாக்கிரதையா பண்ணுங்க.
ஆர்வம் எப்போதும் ஜெயிக்கும்.”
மோகன் ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு, இயக்குநர் ராம் கமென்ட் செய்துள்ளார்.
“ ‘தனி ஒருவன் 2’ படத்துக்காகக் காத்திருக்கிறேன் ராஜா, எதிர்பார்ப்புகளுடனும்... பிரியங்களுடனும்...” எனத் தெரிவித்துள்ளார் ராம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT