Published : 22 Jan 2019 09:02 AM
Last Updated : 22 Jan 2019 09:02 AM
கால்நடைகள் கடத்தப்படுவதை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் சுசித்ரா ராவ் எழுதியுள்ள நூல் ‘தி ஹைவே மாஃபியா’.
இது அரசியல் கலந்த த்ரில்லர் பின்னணியைக் கொண்டதால் வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியிலும் இந்த நூல் வெகுவாக பேசப்பட்டது. இந்நிலையில், இதை திரைப்படம் ஆக்க விரும்புவதாக எழுத்தாளர் சுசித்ரா ராவ் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
‘‘எனது ‘தி ஹைவே மாஃபியா’ கதையை திரைப்படமாக மாற்றும் எண்ணம் உள்ளது. கதையின் நாயகனான அர்ஜுன் கதாபாத்திரத்துக்கு தமிழில் விஜய்யும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், கன்னடத்தில் யாஷும் பொருத்தமாக இருப்பார்கள்’’ என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT