Published : 20 Dec 2018 12:44 PM
Last Updated : 20 Dec 2018 12:44 PM

‘‘திருட்டுப் பூட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு’’ - கைதான விஷால் கொந்தளிப்பு

திருட்டுப் பூட்டுக்கு போலீஸ் எல்லாரும் சேர்ந்து பாதுகாக்கிறாங்க என்று கைதான விஷால் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் வலுத்து வருகிறது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு எதிராக ஒரு தரப்பினர் தயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் வலுத்து வருகிறது. சங்கத்தின் தலைவர் விஷாலுக்கு எதிராக ஒரு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நேற்று புதன்கிழமை 19ம் தேதி அன்று அழகப்பன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, சுரேஷ் காமாட்சி முதலான தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி, சென்னை தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டுப் போட்டனர்.

மேலும் ஏழு கோடி ரூபாய் வரை, விஷால் கையாடல் செய்துவிட்டார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் அடுக்கினர். இதுகுறித்து விஷால், பொதுக்குழுவில் கணக்குக் காட்டப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் அலுவலகத்துக்கு போடப்பட்ட பூட்டை உடைப்பதற்காக விஷால் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் வந்திருந்தனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், போலீசார் விஷால் உள்ளிட்டவர்களை கைது செய்தார்கள்.

அப்போது, நடிகர் விஷால் தெரிவித்ததாவது:

யாரோ ஒருத்தங்க பூட்டுப் போட்டிருக்காங்க. அதை உடைச்சிட்டு, எங்க ஆபீசுக்குப் போறதுக்கு போலீசார் எங்களை அனுமதிக்கலை. தடுத்துக்கிட்டே இருந்தாங்க. திருட்டுப் பூட்டுக்கு போலீஸ் காவல் காக்கிறாங்க. ஏன் இப்படி பண்றீங்கன்னு கேள்விகள் கேட்டதுக்கு, எங்களை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

இப்படிலாம் நடக்குமா, இப்படிலாம் கூட செய்வாங்களா? நம்பவே முடியல. ஆச்சரியமாவும் அதிர்ச்சியாவும் இருக்கு.

இவ்வாறு விஷால் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x