Published : 30 Nov 2018 05:47 PM
Last Updated : 30 Nov 2018 05:47 PM

2.0 ஒரு திரை முத்து!- மகேஷ் பாபு புகழாரம்

2.0 திரைப்படம் ஒரு திரை முத்து என நடிகர் மகேஷ் பாபு கூறியிருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் '2.0'. இந்திய திரையுலகில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

3 வருடத் தயாரிப்பு, கிராபிக்ஸில் தாமதம் என்று பல சோதனைகளைத் தாண்டி நவம்பர் 29-ம் தேதி வெளியானது. பலரும் கிராபிக்ஸ் பிரம்மாண்டம் என்று பாராட்டி புகழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனாக மகேஷ்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

2.0 ஒரு திரை முத்து. இப்படம் இதுவரை எந்தப் படத்திலும் கிடைக்காத அனுபவத்தைத் தந்தது. ஷங்கர் சார் அவரது அறிவுக்கூர்மையை வேற லெவலில் வெளிப்படுத்தியுள்ளார். படத்தை முழுவதுமாக ரசித்தேன். ரஜினிகாந்த் சாருக்கு எனது வாழ்த்துகள். அக்‌ஷய்குமார் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்

இவ்வாறு மகேஷ்பாபு தெரிவித்திருக்கிறார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x