Published : 09 Oct 2018 08:04 AM
Last Updated : 09 Oct 2018 08:04 AM
மதுரையில் தனியார் செல்போன் விற்பனை நிலையத்தை நடிகை சமந்தா நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் எனக்கு அதுபோல் எதுவும் நடைபெறவில்லை. நான் நடிகர் ஒருவரைதான் திருமணம் செய்துள்ளேன்.
திரையுலகில் சில கருப்பு ஆடுகள் உள்ளன. அந்த கருப்பு ஆடுகளை வைத்து மொத்த திரையுலகையும் குறை சொல்வது தவறு.
சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை. எனக்கு அரசியல் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT