Published : 10 Oct 2018 05:21 PM
Last Updated : 10 Oct 2018 05:21 PM
டாப்ஸி நடிக்கும் ‘கேம் ஓவர்’ என்ற படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது.
‘தமிழ்ப்படம்’, ‘காவியத் தலைவன்’, ‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’, ‘தமிழ்ப்படம் 2’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த். இவர் கடைசியாகத் தயாரித்த ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘தமிழ்ப்படம் 2’ ஆகிய இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், டாப்ஸி நடிப்பில் ‘கேம் ஓவர்’ என்ற படத்தைத் தயாரிக்கிறார் சஷிகாந்த். எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா நாயர் நடிப்பில் ‘இறவாக்காலம்’ என்ற படத்தை இயக்கியுள்ள அஸ்வின் சரவணன், இந்தப் படத்தை இயக்கப் போகிறார். நாளை முதல் இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது. சஷிகாந்துடன் இணைந்து ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT