Published : 04 Oct 2018 05:21 PM
Last Updated : 04 Oct 2018 05:21 PM

விஜய் டிவியில் ’அமானுஷ்ய’ சீரியல்

‘அதே கண்கள்’ என்ற அமானுஷ்ய சீரியல், விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

200 ஆண்டுகளுக்கும் மேல் வாழும் தீய சக்தியான மோகினி, தன்னை இளமையாக வைத்துக்கொள்ள மனிதர்களைக் கொல்வாள். அப்படி, ரத்தோட் குடும்பத்தைச் சேர்ந்த ம்ரிதுல் என்பவரைக் கவர்ந்து திருமணம் செய்து கொள்கிறாள். ம்ரிதுலைக் கொலைசெய்து, தன்னுடைய இளமையைத் தக்கவைத்துக் கொள்வதுதான் அவளுடைய நோக்கம்.

அதன்படி, ம்ரிதுலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கிறாள். இதற்கிடையில் அவர்களுக்கு அன்ஸ் மற்றும் காஜல் என இரண்டு குழந்தைகள் பிறக்கின்றனர். மோகினியின் சதிச்செயல் திவ்யாவுக்குத் தெரிந்துவிடுகிறது. எனவே, குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்கிறார் வேதாஸ்ரீ.

18 வருடங்களுக்குப் பிறகு சாதாரண மனிதனாக இருந்த அன்ஸ், அசாதாரண சக்தி பெறுகிறான். இதனால், வேதாஸ்ரீ வருந்துகிறார். தன் குழந்தைகளைப் பார்க்க மோகினி திரும்பி வருவாளா? என்பதுதான் ‘அதே கண்கள்’ சீரியலின் கதை.

ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நசர்’ எனும் இந்தி சீரியலின் டப்பிங் வெர்ஷன் இது. வரும் 8-ம் தேதி முதல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x