Published : 15 Aug 2018 08:48 AM
Last Updated : 15 Aug 2018 08:48 AM

திரைப்படமாகும் நொய்டா சம்பவம்

டெல்லி அடுத்த நொய்டாவைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் ராஜேஷ் தல்வார் - நூபுர் தல்வாரின் மகள் ஆருஷி கடந்த 2008 மே 16-ம் தேதி அவரது படுக்கை அறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். கொலையாளி யாராக இருக்கும் என பலர் மீது சந்தேகிக்கப்பட்டு, கடைசியில் அவரது பெற்றோர் மீதே சந்தேகம் திரும்பியது. நாட்டையே பரபரப்பாக்கிய இந்த கொலை வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. இறுதியில், யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் ஆருஷியின் பெற்றோர் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகும் நிலையில், தற்போது இது சினிமாவாகிறது. அஞ்சலி மற்றும் ராய் லட்சுமி இருவரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x