Last Updated : 07 Aug, 2018 09:43 PM

 

Published : 07 Aug 2018 09:43 PM
Last Updated : 07 Aug 2018 09:43 PM

கடைசி வரை போராடிய ஒரு உயர்ந்த தலைவர் வீழ்ந்துவிட்டார்: அதர்வா புகழாஞ்சலி

கடைசி வரை போராடிய ஒரு உயர்ந்த தலைவர் வீழ்ந்துவிட்டார் என்று கருணாநிதிக்கு அதர்வா புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.

கருணாநிதியின் மறைவு குறித்து அதர்வா தனது ட்விட்டர் பக்கத்தில், “கடைசி வரை போராடிய ஒரு உயர்ந்த தலைவர் வீழ்ந்துவிட்டார் என்பதைக் கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தத்துக்கு உள்ளாகியுள்ளேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தாருக்கு இந்த இழப்பை தாங்கும் வலிமை கிடைக்கட்டும்” என்று அதர்வா தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x