Published : 18 Aug 2018 09:34 AM
Last Updated : 18 Aug 2018 09:34 AM

சுமயாவின் திட்டம்

கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அசத்திவரும் சுமயா தற்போது பெப்பர்ஸ் டிவியில் ‘பெப்பர்ஸ் மார்னிங்’ நிகழ்ச்சியையும் சேர்த்து கையில் எடுத்துள்ளார்.

‘இன்று ஒரு கதை’, ‘யோகம் தரும் யோகா’, ’ஏற்றம் தரும் மாற்றம்’ என்று 3 பிரிவுகளாக ஒளிபரப்பாகும் இத்தொடர் காலை நேரத்துக்கு பெரிதும் உந்துசக்தியாக அமைந்திருப்பதாக பார்வையாளர்கள் கொண்டாடுகிறார்கள். சின்னத்திரை தொகுப்பாளினி பொறுப்பை விரும்பி எடுத்துக்கொண்டேன். சினிமா தொடங்கி தொடர்ந்து இப்படி பொழுதுபோக்கு அம்சங்களோடு, மற்றவர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்கி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பார்வையாளர்கள் மற்றும் தோழிகள், ‘அடுத்து நடிப்புக்கு போகலாமே?’ என்கிறார்கள். ஆனால், அந்த முடிவை எடுப்பது எனக்கு யோசனையாகவே இருக்கிறது. இப்போது இருக்கும் இந்த நிலை, நான் விரும்பி ஏற்றுக்கொண்டது. அதுபோல, நடிப்பு மீது இயல்பாகவே எனக்கு எப்போது நாட்டம் ஏற்படுகிறதோ, அப்போது அதில் கவனம் செலுத்துவேன் என்கிறார் சுமயா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x