Published : 27 Jul 2018 06:22 PM
Last Updated : 27 Jul 2018 06:22 PM
‘கலைஞர் நிகழ்த்தியது உலக சாதனை’ என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கோபாலபுரத்தில் உள்ள அவர் இல்லத்துக்குச் சென்று வருகின்றனர்.
இன்று கோபாலபுரம் சென்று திரும்பிய பாரதிராஜா, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், தமிழ்நாட்டில் தக்கவைத்த ஒரே தலைவர் கலைஞர் மட்டும்தான். 50 ஆண்டுகள் தொடர்ந்து யாருமே அந்த இடத்தில் நின்றதில்லை. இது உலக சாதனை. இன்னும் நூற்றாண்டுகள் கழித்து இந்த மண்ணைப் பற்றிப் பேசினாலும், கலைஞரைப் பதிவு செய்துதான் பேச முடியும்.
கொள்கைகளில் ஆயிரம் மாச்சரியங்கள் இருக்கலாம். ஆனால், எல்லாரும் இன்று பெருமைக்குரிய தலைவராக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவர் அவர்தான். நலமாக இருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் நன்றாக இருப்பார். அவர் நூறாண்டு வாழ நான் வாழ்த்துகிறேன்” என்று பாரதிராஜா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT