Published : 16 Jun 2018 11:59 AM
Last Updated : 16 Jun 2018 11:59 AM

லண்டன் பறக்கும் கே.வி.ஆனந்த் குழு

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் எடுக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு இம்மாத மூன்றாவது வாரத்தில்

(ஜூன் 24 முதல்) லண்டன் புறப்படுகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சைகல் ஒப்பந்தமாகியுள்ளார். பட இயக்குநர் கே.வி.ஆனந்த் இந்த வாரத்தில் படத்தின் போட்டோஷூட் வேலைகளை கவனிக்கிறார்.

முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி அங்கே 15 நாட்கள் முடித்துக்கொண்டு சென்னை திரும்ப உள்ளனர். அங்கே சூர்யா, சாயிஷா சைகல் உள்ளிட்டோரின் முக்கிய காட்சிகள் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x