Published : 22 May 2018 05:41 PM
Last Updated : 22 May 2018 05:41 PM

‘தீயை நிறுத்துங்கள்; தீர்வு காணுங்கள்’ - கவிஞர் வைரமுத்து கோரிக்கை

‘தீயை நிறுத்துங்கள்; தீர்வு காணுங்கள்’ என கோரிக்கை விடுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை, கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இந்த வன்முறையில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். பலர், படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் தன்னுடைய கருத்தைப் பதிவுசெய்துள்ள கவிஞர் வைரமுத்து, “பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்கிறது காவல்துறை. அச்சப்பட வேண்டியது அரசாங்கமல்லவோ? தீயை நிறுத்துங்கள்; தீர்வு காணுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராகப் பலரும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். ‘சட்டம், ஒழுங்கைக் காக்காத அரசு கலைக்கப்பட வேண்டும்’ என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ‘சர்வாதிகார தமிழக அரசு’ என டிடிவி தினகரனும், ‘தமிழினம் இதை ஒருபோதும் வேடிக்கைப் பார்க்காது’ என இயக்குநர் வ.கவுதமனும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x