Published : 07 Apr 2018 08:43 PM
Last Updated : 07 Apr 2018 08:43 PM
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் படத்தை சஷிகாந்த் தயாரிக்கிறார்.
‘இறைவி’ படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதாக ஒப்புக் கொண்டார் தனுஷ். இந்தப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், தனுஷின் அடுத்தடுத்த கமிட்மெண்டுகளால் சொன்னபடி கார்த்திக் சுப்பாராஜுக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. எனவே, பிரபுதேவாவை வைத்து ‘மெர்க்குரி’ படத்தை இயக்கினார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்பாராஜுக்கு கிடைத்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
ரஜினி படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் கார்த்திக் சுப்பாராஜ். பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இருந்து விலகிக்கொள்ள, ‘விக்ரம் வேதா’ படத்தைத் தயாரித்த சஷிகாந்த் தன்னுடைய ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுக்க லண்டனில் நடைபெறுகிறது.
தனுஷ் இரண்டாவதாக இயக்கவுள்ள படத்தையும் தயாரிக்கப் போவதாக ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT