Last Updated : 19 Jan, 2018 11:56 AM

 

Published : 19 Jan 2018 11:56 AM
Last Updated : 19 Jan 2018 11:56 AM

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்: தீபாவளி வெளியீடு என அறிவிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று (ஜனவரி 19) தொடங்கப்பட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், நாயகியாக கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

இந்நிலையில், இன்று (ஜனவரி 19) சென்னையில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. 2 நாட்கள் மட்டுமே சென்னையில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மும்பையில் விரைவில் சுமார் 40 நாட்கள் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருப்பதை முன்னிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் "இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்" என ட்வீட் செய்திருக்கிறார். இதன் மூலம் படம் தீபாவளி வெளியீடு என்பது உறுதியாகியுள்ளது.

'துப்பாக்கி' மற்றும் 'கத்தி' ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x