Last Updated : 08 Jan, 2018 05:19 PM

 

Published : 08 Jan 2018 05:19 PM
Last Updated : 08 Jan 2018 05:19 PM

கே.வி.ஆனந்த் உடன் கூட்டணி: உறுதி செய்த சூர்யா

மீண்டும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவிருப்பதாக சூர்யா உறுதி செய்திருக்கிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. தெலுங்கில் 'கேங்' என பெயரில் வெளியாவதால் ஹதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் சூர்யா.

அச்சந்திப்பில் தனது அடுத்த படங்கள் குறித்த கேள்விக்கு, "செல்வராகவன் சார் படம் முடிவடைந்தவுடன் மீண்டும் கே.வி.ஆனந்த் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன்" என்று தெரிவித்திருக்கிறார் சூர்யா. இதன் மூலம் மீண்டும் சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது.

மேலும், இயக்குநர் ஹரி மற்றும் விக்ரம் குமார் இருவரோடும் அடுத்த படங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி படத்தை தயாரிக்க சில தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x