Last Updated : 06 Oct, 2017 06:58 PM

 

Published : 06 Oct 2017 06:58 PM
Last Updated : 06 Oct 2017 06:58 PM

மீண்டும் இணையும் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங்

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தைத் தொடர்ந்து மீண்டும் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள்.

வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 17-ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் இருவரும் இணைந்து மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள். இதனை கண்ணனிடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராஜத் இயக்கவுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தைத் தொடர்ந்து ராஜத் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் கார்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x