Published : 02 Oct 2017 06:50 PM
Last Updated : 02 Oct 2017 06:50 PM

விஜய் தமிழக முதல்வராக வந்தால் மகிழ்ச்சி: எஸ்.ஜே.சூர்யா

விஜய் தமிழக முதல்வராக வந்தால் எனக்கு மகிழ்ச்சி என்று நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ''நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்பது சட்டமா? இவர் வரவேண்டும் இவர் வரக்கூடாது என்றெல்லாம் இல்லை. இது சுதந்திர இந்தியா. நல்லது செய்கிற யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்.அழகாக, தரமாக நல்லது செய்யலாம்.

சிறந்த முதல்வராக விஜய் வந்தால் வேண்டாம் என்று யார் சொல்லப் போகிறார்கள்? விஜய்யுடன் நான் நன்றாகப் பழகியிருக்கிறேன். தனக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கு உண்மையாக இருந்து அதைச் சரியாக செய்து முடிப்பார். அவரது எண்ணம் நல்ல எண்ணம். விஜய் என் நண்பர். அவர் முதல்வராக வந்தால் எனக்கு மகிழ்ச்சி'' என்று எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x