Last Updated : 26 Oct, 2017 12:50 PM

 

Published : 26 Oct 2017 12:50 PM
Last Updated : 26 Oct 2017 12:50 PM

நரகாசுரன் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடக்கம்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் 'நரகாசுரன்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு அக்டோபர் 26-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

'துருவங்கள் பதினாறு' இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படம் 'நரகாசுரன்'. முன்னதாக, சந்தீப் கிஷன் மற்றும் ஆத்மிகா பங்கேற்ற முதற்கட்ட படப்பிடிப்பை முடித்தது படக்குழு.

தற்போது அரவிந்த்சாமி, இந்திரஜித் மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோர் பங்கேற்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 26) முதல் தொடங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளார்.

'துருவங்கள் பதினாறு' படத்தைப் போலவே ஊட்டி பின்னணியில் இப்படத்தையும் இயக்கி வருகிறார் கார்த்திக் நரேன். இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படத்தை உருவாக்கவுள்ளார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x