‘கே.ஜி.எஃப் 3’ எப்​போது? - நடிகர் யாஷ் பதில்

‘கே.ஜி.எஃப் 3’ எப்​போது? - நடிகர் யாஷ் பதில்
Updated on
1 min read

பிர​சாந்த் நீல் இயக்​கத்​தில் உரு​வான ‘கே.ஜி.எஃப்’ படம் மூலம் பிரபல​மானவர் நடிகர் யாஷ். அவருடைய ராக்கி பாய் கதாபாத்திரம் பேசப்​பட்​டது. இதையடுத்து வெளி​யான ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்​படம் சூப்​பர் ஹிட் வரவேற்​பைப் பெற்​றது. இந்​தப் படங்​களின் வெற்றி அவரை பான் இந்​தியா ஸ்டா​ராக உயர்த்​தி​யது.

அடுத்து அவர் கீது மோகன் தாஸ் இயக்​கி​யுள்ள ‘டாக்​ஸிக்’ படத்தின் நடித்​துள்​ளார். பிரம்​மாண்​ட​மாக உரு​வாக்​கப்​பட்​டுள்ள இப்​படத்தை அடுத்​து, ‘ராமாயணா’ படத்​தில் ராவண​னாக நடித்துள்ளார். ‘ராமாயணா’ திரைப்​படம் தீபாவளிக்கு சர்​வ​தேச அளவில் வெளி​யாக இருக்​கிறது.

இதற்​கான புரமோஷன் அமெரிக்கா​வில் நடை​பெற்ற சினி​மா​கான் 26 விழா​வில் நடைபெற்​றது. அங்கு அவர் பல்​வேறு ஊடகங்​களுக்​குப் பேட்டியளித்​தார்.

அப்​போது அவரிடம் ‘கே.ஜி.எஃப் 3’ படம் பற்றி கேட்​கப்​பட்​டது. அதற்​குப் பதிலளித்த அவர், “நானும் இயக்​குநர் பிர​சாந்த் நீலும் தொடர்ந்து இது குறித்​துப் பேசிக்​கொண்​டிருக்​கிறோம். சரி​யான திரைக் ​கதையை உரு​வாக்க வேண்​டும்; பிறகு, நிச்​சய​மாக அந்தப் படத்தை உரு​வாக்​குவோம். அது உடனடி​யாக நடக்​காது. இன்​னும் சிறிது காலம் ஆகும்” என்​று கூறி​யுள்​ளார்​.

‘கே.ஜி.எஃப் 3’ எப்​போது? - நடிகர் யாஷ் பதில்
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in