Published : 21 Jun 2023 07:41 AM
Last Updated : 21 Jun 2023 07:41 AM

சின்னத்திரை: 300 எபிசோடுகளை கடந்த ‘பொன்னி C/O ராணி’

சென்னை: கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகா தொடர் ‘பொன்னி C/O ராணி’. ராடன் மீடியா தயாரிக்கும் இந்தத் தொடரை சரவணன் இயக்குகிறார்.

பொன்னியாக ப்ரீத்தி சஞ்சீவும், ராணியாக ராதிகா சரத்குமாரும் நடிக்கின்றனர். மற்றும் அர்ஜுன், தனலட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். கடந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கிய இந்த தொடர் இப்போது, 300 எபிசோடுகளை கடந்துள்ளது. தற்போது பவித்ராவின் வளைகாப்பு நிகழ்ச்சியோடு தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இதுபற்றி பிரீத்தி சஞ்சீவ் கூறும்போது, “இந்த தொடர் 300 எபிசோடு என்ற மைல்கல்லை எட்டியதில் நான் உட்பட குழுவினர் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x