பெங்காலி சின்னத்திரை நடிகை சுபர்ணா தற்கொலை

பெங்காலி சின்னத்திரை நடிகை சுபர்ணா தற்கொலை
Updated on
1 min read

பெங்காலி சின்னத்திரை நடிகை சுபர்ணா தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை தொடர்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை சுபர்ணா ஜாஷ், திரைப்படங்களில் நடிகையாக வேண்டும் என்று விரும்பியதாகவும், ஆனால் அவரால் குறிப்பிடத்தக்க வகையில் எந்த வாய்ப்பும் பெற முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில காலமாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக சுபர்ணாவின் நண்பர்களும், குடும்பத்தாரும் தெரிவித்துள்ளனர்.

தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சுபர்ணாவின் உடலைக் கண்டெடுத்த அவரது பெற்றோர், உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திங்கட் கிழமை அவரது உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சமீபத்தில் இந்தி சின்னத்திரை நடிகை சேஜல் சர்மா என்பவர் மும்பையில் தற்கொலை செய்துகொண்டது நினைவுகூரத்தக்கது.

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in