Published : 27 Dec 2022 08:55 AM
Last Updated : 27 Dec 2022 08:55 AM

‘சிறு பட தயாரிப்பாளர்களை கேவலமாக நினைக்கிறார்கள்’ - தயாரிப்பாளர் வி.ராஜா

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்து, நாயகனாக நடித்துள்ள படம் ‘அருவா சண்ட’. ஆதிராஜன் இயக்கியுள்ளார். வரும் 30ம் தேதி வெளியாகும் இந்தப்படத்தின் பாடல்களை கலைப்புலி தாணு வெளியிட, தயாரிப்பாளர்கள் முரளி ராமநாராயணன், கேயார், கே.ராஜன், அசோக் சாம்ராஜ் பெற்றனர்.

விழாவில், படத்தின் தயாரிப்பாளர் வி.ராஜா பேசும்போது, “இந்தப் படத்தில் நிறையகற்றுக்கொண்டேன். சினிமா விழாக்களுக்குஹீரோயின்கள் மட்டுமல்ல, அம்மா கேரக்டர்களில் நடிப்பவர்களும் வருவதில்லை. இதில் அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணனிடம் காலில் விழாத குறையாக அழைத்தும் மறுத்துவிட்டார். சிறு பட தயாரிப்பாளர்களை கேவலமாக நினைக்கிறார்கள். கலைத்துறைக்கு வருகிறவர்களை கலைத்துறையில் உள்ளவர்களேநசுக்கிவிடுகிறார்கள். தயவு செய்து சிறியதயாரிப்பாளர், பெரிய தயாரிப்பாளர், புதியவன், பழையவன் என்று பாரபட்சம் பார்க்காதீர்கள்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x