Published : 19 Dec 2016 03:43 PM
Last Updated : 19 Dec 2016 03:43 PM
தமிழக தலைவர் ஜெயலலிதா மறைந்ததால் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டு இருப்பதாக 'பைரவா' படக்குழு அறிவித்துள்ளது.
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பைரவா'. வைரமுத்து பாடல்களை எழுத சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். ஜனவரி 12ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 23ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இப்படத்துக்கு இசை வெளியீட்டு விழா கிடையாது, நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி மற்றும் பாரதி ரெட்டி இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், "’பைரவா’ இசைவெளியீட்டு விழாவை படு விமரிசையாக நடத்த எண்ணியிருந்தோம். இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் எதிர்பாராத இழப்பால் இவ்விழா கைவிடப்பட்டுள்ளது.
காரணம், எங்களுடைய விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 'நம்நாடு' திரைப்படத்தில் நடித்தார்கள். அதோடு மட்டுமல்லாமல், எங்களுடைய குடும்பத்தில் ஒருவராக அவரை மதித்து வந்தோம். அவருடைய இழப்பின் காரணமாக 'பைரவா' இசைவெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டோம்.
அதோடு, விஜய்யும் மேற்கண்ட காரணத்திற்காக இசைவெளியீட்டை பிரமாண்ட விழாவாக நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அதனால், எளிமையான முறையில் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி பாடல்களை நேரடியாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்" என்று
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT