Published : 03 Aug 2022 08:23 PM
Last Updated : 03 Aug 2022 08:23 PM

“ஆயிரம் கோயில்களை கட்டுவதை விட ஒருவரைப் படிக்க வைப்பது மேல்” - ‘விருமன்’ நிகழ்வில் சூரி

''ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஒருவரைப் படிக்க வைப்பது பல ஜென்மம் பேசும்'' என்று 'விருமன்' பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சூரி பேசினார்.

மதுரையில் 'விருமன்' பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, கார்த்திக், அதிதி சங்கர், இயக்குநர் பாரதிராஜா, யுவன்சங்கர் ராஜா, முத்தையா, சூரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சூரி, ''தேசிய விருதுபெற்ற சூர்யாவுக்கு வாழ்த்துகள். சினிமாவில் உங்களின் உழைப்புதான் உங்களை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது.

நீங்கள் தயாரிக்கும் படங்களும், உங்கள் உழைப்பும் பல ஆண்டுகளுக்கு பேசப்படும். அதையெல்லாம் கடந்து, ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஒருவரை படிக்க வைப்பது பல ஜென்மம் பேசும். அது மிகப் பெரிய விஷயம். அதை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் உங்களைச் சுற்றி இப்படியான பெரிய கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. எப்போதும் அவர்கள் இருப்பார்கள்.

படத்தில் குத்துக்கல்லு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படம் வெற்றிபெற வாழ்த்துகள்'' என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x