Published : 02 Nov 2021 01:08 PM
Last Updated : 02 Nov 2021 01:08 PM

'ஜெய் பீம்’ பார்த்தேன்; கண்கள் குளமானது: கமல் பாராட்டு

சென்னை

'ஜெய் பீம்' பார்த்தேன். கண்கள் குளமானது என்று கமல் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். தற்போது 'ஜெய் பீம்' பார்த்துவிட்டு கமலும் தனது ட்விட்டர் பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

" 'ஜெய் பீம்’ பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா, படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்".

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x