Published : 04 Jul 2019 08:03 AM
Last Updated : 04 Jul 2019 08:03 AM
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்குவதைத் தொடர்ந்து அடுத்து, ‘ரெமோ’ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கிவரும் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி கவனம் செலுத்த உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது தொடங்க உள்ள படப்பிடிப்பில் கார்த்தி, ராஷ்மிகா இருவரது காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. காதல், எமோஷன் கலந்த திரில்லர் வகை படமாக உருவாகும் இப்படத்துக்கு விவேக் – மெர்வின் இசை அமைக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT