Last Updated : 02 Apr, 2019 09:51 AM

 

Published : 02 Apr 2019 09:51 AM
Last Updated : 02 Apr 2019 09:51 AM

அதிசயம் நீங்கள்; உங்கள் படைப்புகள் வாழும்: மகேந்திரனுக்கு இயக்குநர் பா.இரஞ்சித் புகழாஞ்சலி

அதிசயம் நீங்கள்; உங்கள் படைப்புகள் வாழும் என்று இயக்குநர் மகேந்திரன் மறைவு இயக்குநர் பா.இரஞ்சித்தெரிவித்துள்ளார்.

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

மகேந்திரன் மறைவு குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்திருப்பதாவது:

இயக்குநர் மகேந்திரன், எளிமைதான் உங்கள் இலக்கு. திரைவிமர்சனம் எழுதியது மட்டும் இல்லாமல் எது கலைத்தன்மையோடு வெகு சன மக்களை கவர்ந்திழுக்கும் சினிமா என்று 'உதிரிப்பூக்கள்', 'முள்ளும் மலரும்' போன்ற படங்களை எடுத்து காட்டிய அதிசயம் நீங்கள். ஐயா உம் படைப்புகள் எப்போதும் வாழும.்

இவ்வாறு இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x