Published : 01 Jan 2019 10:00 AM
Last Updated : 01 Jan 2019 10:00 AM

மைசூர் அரண்மனையில் டூயட்

துபாயில் உள்ள தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு இந்த வாரம் சென்னை திரும்பும் நிவேதா பெத்துராஜ், ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் பாடல் படப்பிடிப்புக்காக மைசூர் செல்ல உள்ளார். பிரபுதேவா நடிப்பில் ஏ.சி.முகில் இயக்கிவரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

இந்நிலையில் மைசூர் அரண்மனை பின்னணியில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் டூயட் பாடல் ஒன்றை ஜனவரி முதல் வாரத்தில் படமாக்குகின்றனர். இதற்கிடையே, ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் படத்தில்  கார்த்தியுடன் நடிப்பது குறித்த ஒப்பந்தமும் இந்த மாதத்தில் இறுதிசெய்யப்படும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x