Last Updated : 31 Dec, 2018 01:06 PM

 

Published : 31 Dec 2018 01:06 PM
Last Updated : 31 Dec 2018 01:06 PM

சின்மயி கணவருக்கு சபாஷ் சொன்ன சமந்தா

மீ டூ இயக்கம் குறித்தும் அதில் புகார் கூறியவர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்த பழம்பெரும் நடிகை செளகார் ஜானகிக்கு பதிலடி கொடுத்த சின்மயி கணவரைப் பாராட்டியிருக்கிறார் நடிகை சமந்தா.

முன்னதாக, சினிமா இணையதளத்துக்கு பேட்டியளித்த சௌகார் ஜானகி, " நான் ஒரு பெண்ணியவாதி. ஆனால் மீ டூவை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இது குப்பை" எனப் பேசியிருந்தார். அதனைப் பேட்டிகண்ட ஒய்.ஜி.மகேந்திரனும் ஆமோதித்தார்.

இந்நிலையில், இது குறித்து சின்மயியின் கணவர் ராகுல், தனது வலைப்பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றைப் பதிவிட்டார். அதில் தனது மனைவியின் துணிச்சலைப் பாராட்டியதோடு பாலியல் சீண்டல்கள் குறித்து தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து நடிகை சமந்தா, ராகுலின் ட்வீட்டுக்குப் பதிலளிக்கும்விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில், "நிறைய பெண்களைவிட உங்களுக்குச் சிறப்பான புரிதல் இருக்கிறது. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x