Published : 09 Aug 2018 09:16 PM
Last Updated : 09 Aug 2018 09:16 PM

படமாகும் ஆருஷி கொலை வழக்கு: அஞ்சலி, ராய் லட்சுமி நடிக்கின்றனர்

பரபரப்பை ஏற்படுத்திய ஆருஷி கொலை வழக்கு, படமாக உருவாக இருக்கிறது. அதில் அஞ்சலி மற்றும் ராய் லட்சுமி இருவரும் நடிக்கின்றனர்.

நொய்டாவைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வாரின் மகளான ஆருஷி, கடந்த 2008-ம் ஆண்டு மே 16-ம் தேதி அவருடைய படுக்கை அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரைக் கொலை செய்தது யாராக இருக்கும் எனப் பலரின் மீது சந்தேகிக்கப்பட்டு, கடைசியில் அவரது பெற்றோர் மீதே சந்தேகம் திரும்பியது.

இந்தியாவையே பரபரப்பாக்கிய இந்தக் கொலை வழக்கு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. இறுதியில், யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் ஆருஷியின் பெற்றோர் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நடைபெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் சினிமாவாகிறது. அஞ்சலி மற்றும் ராய் லட்சுமி இருவரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x