Published : 25 May 2023 11:13 AM
Last Updated : 25 May 2023 11:13 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 80 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (வியாழக்கிழமை) சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 33 புள்ளிகள் சரிவடைந்து 61,740 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 11 புள்ளிகள் சரிந்து 18,273 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கின. காலை 10.24 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 80.44 புள்ளிகள் சரிவடைந்து 61693.34 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 8.35 புள்ளிகள் சரிந்து 18277.05 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் கலப்பு சூழல், மாதாந்திர எஃப் அண்ட் ஓ காலாவதி காரணமாக இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பாரதி ஏர்டெல், ஐடிசி, கோடாக் மகேந்திரா பேங்க், நெஸ்ட்லே இந்தியா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், எல் அண்ட் டி, என்டிபிசி, மாருதி சுசூகி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. டாடா மோட்டார்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி, விப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், சன்பார்ம இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், டெக் மகேந்திரா, டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டைட்டன் கம்பெனி, இன்போசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x