Published : 17 Dec 2016 11:07 AM
Last Updated : 17 Dec 2016 11:07 AM

‘ஜனவரியில் பணப்புழக்கம் சரியாகும்’

பண மதிப்பு நீக்கம் காரணமாக உயர் மதிப்பு நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை ஜனவரி மாத மத்தியில் சரியாகும் என நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.

மேலும், 10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா உயர வேண்டும் என்றால் இதுபோன்ற நடவடிக்கைகள் நிச்சயம் தேவை. இந்தியாவின் ரொக்கமற்ற பரிவர்த் தனையை நோக்கி செல்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. 7.5 சதவீதம் என்னும் வளர்ச்சி நீடித்து இருப் பதற்கு ரொக்கமற்ற பரிவர்த் தனையை ஊக்குவிப்பது அவசியம் என்று அமிதாப் காந்த் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x