Published : 02 Jan 2023 10:25 AM
Last Updated : 02 Jan 2023 10:25 AM

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வு

கோப்புப்படம்

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக தொடக்கத்தின் போது சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வுடன் 60,982 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 42 புள்ளிகள் உயர்வுடன் 18,150 ஆக இருந்தது.

வாரத்தின் முதல் நாள், புதிய வருடத்தின் முதல் நாளான இன்று வார்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. காலை 09:44 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 138.52 புள்ளிகள் உயர்வுடன் 60,979.26 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 3.45 புள்ளிகள் சரிவடைந்து 18101.85 ஆக இருந்தது.

உலக அளவில் நிலவிவரும் பாதகமான சூழலுக்கிடையில் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடனேயே தொடங்கின. மந்தநிலை குறித்த அச்சம், வட்டிவிகிதம் அதிகரிப்பு குறித்த கவலை போன்றவற்றால் உலக அளவில் பாதகமான சூழல் நிலவி வரும் நிலையில், உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடனேயே இருந்தன. தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை ஹெச்டிஎஃப்சி பங்குகள் உயர்வில் இருந்தது. நெஸ்ட்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x