Last Updated : 24 Dec, 2016 10:50 AM

 

Published : 24 Dec 2016 10:50 AM
Last Updated : 24 Dec 2016 10:50 AM

ரூ.2 லட்சம் ரொக்க பரிவர்த்தனை: வருமான வரித்துறை புதிய அறிவிப்பு

வர்த்தகர்கள் ரூ.2 லட்சத்துக்கும் மேல் ரொக்கத்தின் மூலமாக வர்த்தகம் செய்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.

வருமான வரி விதிகள் 1962-ல் விதி 114-இ குறித்து பல்வேறு சந் தேகங்கள் வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரே பரிவர்த்தனையில் 2 லட்ச ரூபாய் மேல் வர்த்தகம் செய்தால் அந்த விவரத்தை வருமான வரித்துறைக்கு சமர்பிக்க வேண்டுமா என்பது போன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

இந்த சந்தேகங்களை தெளிவு படுத்தும் வகையில் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் (சிபிடிடி) அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளது. ``விதி 114, உட்பிரிவு 3-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பரிவர்த்தனைகள் அறிக் கையை சமர்பிக்கும் போது ஒரே பரிவர்த்தனையில் 2 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் செய்தால் அதற்குரிய ரசீதை சமர்பிக்க வேண்டும்’’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x