Published : 05 Jul 2014 10:00 AM
Last Updated : 05 Jul 2014 10:00 AM

ஆஷிஷ் குமார் சௌகான்- இவரைத் தெரியுமா?

#பாம்பே பங்குச் சந்தையின் (பிஎஸ்இ) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

#இதற்கு முன் ஐடிபிஐ வங்கியில் பணியாற்றியுள்ளார்.

#1992-ம் ஆண்டு தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) அமைக்கப்பட்டது. அதன் உருவாக்கத்தில் ஐடிபிஐ முக்கிய பங்கு வகித்தது. 1993ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டுவரை தேசிய பங்குச் சந்தையில் பணியாற்றினார்.

#பின்னர் ரிலையன்ஸ் குழுமத்தில் தலைமை தகவல் அதிகாரியாக (சிஐஓ) பணியாற்றினார். மும்பை இந்தியன் கிரிக்கெட் அணி, ரிலையன்ஸ் இன்ஃபோசொல்யூசன்ஸ் ஆகியவற்றுக்கு தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றினார்.

#2009-ம் ஆண்டு பாம்பே பங்குச் சந்தையில் துணை தலைமைச் செயல் அதிகாரியாக சேர்ந்தார். 2012-ம் ஆண்டு முதல் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.

#ஐசிசிஎல்,சிடிஎஸ்எல், பிஎஸ்இ பயிற்சி மையம், பிஎப்எஸ்ஐ திறன் மேம்பாட்டு கவுன்சில், மார்கெட்பிளேஸ் டெக்னாலஜீஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

#மும்பை ஐஐடி-யில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் இளங்கலைப் பட்டமும் கொல்கத்தா ஐஐஎம் நிர்வாகவியல் கல்லூரியில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x